Tuesday, 30 August 2016

என்னை பற்றி...

இரண்டு நாள் பயிற்சி கலந்து கொண்டால் நீங்கள் சிறப்பாக பலன்கள் எடுக்கலாம் முற்றிலும் மாறுபட்ட கணிதங்கள். 
சென்னையில் 1999 ம் ஆண்டு நடைபெற்ற விழாவில் என் குருநாதர் வாசியோகசித்தர் தவத்திரு மகரிஷி சாமி அவர்கள் ஜோதிட பிதாமகன் வீத்வான் வே லட்சுமண ஐயா அவர்கள். வாணசாஸ்திரம் ஆராட்சியாளர். ஐயா ஏ வீ சுந்தரம் அவர்களுடன்  பல்லடம் கந்தனடிமை வீ கே மந்தராச்சலம்.
ஈரோடு விழாவில் கோள்களின் கோலாட்டம் ஆசிரியரும் ஞான சிந்தாமணி மாத ஜோதிட நூல் ஆசிரியரும் நம்மோடு வாழ்ந்த வாசியோக சித்தர் தவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி ஸ்வாமிகள் பல்லடம் கந்தனடிமை வி.கே மந்தராச்சலத்தை பாராட்டிய காட்சி.
ஈரோடு விழாவில் 2002 ஜனவரி 11.12.13 மூன்று நாள் விழாவில் பல்லடம் கந்தனடிமை வி.கே.மந்தராச்சலம் பேசும் பொழுது தமிழக ஜோதிட ஜாம்பவான்கள் விழா மேடையில் .
 AMN டிவி லைவ் ப்ரோக்ராம் 


வாசியோகம் கற்று தந்த வாசியோகசித்தர் தவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி சுவாமிகள்.

ஜோதிட நண்பர்களே!
இவர் தான் ஞானசிந்தாமணி ஜோதிட மாத இதழ் ஆசிரியரும் கோள்களின் கோலாட்டம் நூல் ஆசிரியரும் பல்லாயிரம் சிஷ்யர்களுக்கு வாசியோகம் கற்று தந்த வாசியோகசித்தர் தவத்திரு மகரிஷி தயானந்த ஜோதி சுவாமிகள்.

என்றும் குருவின் உண்மை மாணவன்,
வீ.கே.மந்தராச்சலம் 98422 56631

ஆம்! ஆன்மிகம் நெறிப்படுத்தும். ஜோதிடம் வழிப்படுத்தும். மருத்துவம் குணப்படுத்தும் என்றார்கள்.

முக நூல் நண்பர்களே!
பல்லடம் கந்தனடிமை வீ.கே.மந்தராச்சலம் 98422 56631
ஜோதிடம் என்பது நம் வாழ்க்கையை ஒவ்வொருவரும் சரி செய்து வாழ்க்கையை
செம்மைபடுத்துவதற்காக நம் முன்னோர்கள் காட்டிய வழியாகும். 

ஆம்! 
ஆன்மிகம் நெறிப்படுத்தும். 
ஜோதிடம் வழிப்படுத்தும். 
மருத்துவம் குணப்படுத்தும் என்றார்கள்.

ஜோதிடம் கணிதம் எப்படி என்றால். பஞ்ச அங்கங்கள் கிழமை.திதி. நட்சத்திரம்.
நாமயோகம். கர்ணம். இவைகள் ஐந்தும் பஞ்சபூதங்களாக (நிலம்,நீர்,நெருப்பு,காற்று,
ஆகாயம்) மாறி ஒன்பது கோள்களின் வழியே பன்னிரண்டு ராசிகளில் விளையாடும் விளையாட்டே "கோள்களின் கோளாட்டம்" என எம் குருநாதர் தவத்திரு மகரிஷி அவர்கள் கணக்கிட்டு காட்டினார்கள்.

கிழமை (மண்) படைத்தல் பொறுப்பேற்பது போல் திதி(நீர்) காத்தலையும் ஆம் அதனால் தான் நம் முன்னோர்கள் நீரை(தீர்த்தம்) தெளித்து சரி செய்தார்கள், நட்சத்திரம் (நெருப்பு) அழித்தலையும்(தீமைகள்) செய்கிறது, ஜோதிட கணிதத்தில் அனைத்து காரணங்களுக்கு பாதையாக செயல்படுகிறது. 
உலகில் மாசற்றது நெருப்பு அதனால் தான் மாசற்றவர்களுக்கு வரும் தீமைகளை அழிக்கிறது, நாமயோகம் (காற்று) அருள்பாலித்தலை (ஆசீர்வதித்தல்) செய்கிறது நாமயோகத்தின் சிறப்பே காற்றைப்போலவே சிறப்பு வாய்ந்தது ஆகும். 
கரணம் (ஆகாயம்) மறைத்தலை செய்கிறது, ஆம் அறுவடை. பூட்டி முடித்தல். முடிவு பெறுதல். மரணம்.
இவைகளை செய்கிறது, படைத்தலுக்கு குருபகவான் பிரம்மா சரஸ்வதி காத்தலுக்கு சுக்கிரன் விஷ்னு லட்சுமி தாயும் அழித்தலுக்கு அங்காரகன் ருத்தரன் பார்வதி
அருள்பாலித்தலுக்கு புதன் மகேஸ்வரன்-- --மகேஸ்வரி தாயாரும்
மறைத்தலுக்கு சனீஸ்வரனும் சாதாசிவன்-- --மணோன்மனி தாயும் பொறுப்பேற்கிறார்கள்
நன்றி.! நண்பர்களுக்கு பயன்படும் படி சூட்சுமங்கள் எழுதவும்.

இரண்டு நாள் பயிற்சி கலந்து கொண்டால் நீங்கள் சிறப்பாக பலன்கள் எடுக்கலாம் முற்றிலும் மாறுபட்ட கணிதங்கள். ஜோதிடம் படித்தவர்கள் மட்டும்

முக நூல் நண்பர்களே,
பல்லடம் கந்தனடிமை வீ.கே.மந்தராச்சலம் 98422 56631

ஜோதிட நண்பர்களே உங்களுக்கு ஜாதகத்தில் இது தான் பலன் என்று உறுதியாக. கூறுவதற்க்கும் பலன்களை நிர்னியக்கும் தவத்திரு மகரிஷி அவர்களின் கணிதங்கள் சூட்சும நிலையில் தரப்படும். 

எதிரிடை சாதக நிலை. பஞ்சங்கநிலை. ஒரு திசா புத்திபலன்கள் இது தான்என உறுதியாக கூறுவது உதாரண ஜாதங்களுடன் தெளிவான கணிதங்களுடன்.

இரண்டு நாள் பயிற்சி கலந்து கொண்டால் நீங்கள் சிறப்பாக பலன்கள் எடுக்கலாம் முற்றிலும் மாறுபட்ட கணிதங்கள். ஜோதிடம் படித்தவர்கள் மட்டும்.

மேலும் இந்த வகுப்பில் எடுக்கும் கணிதங்களுக்கு நீங்கள் சூட்சுமம் கூறினால்

இங்கே நீங்கள் ஆசிரியர்,பங்கேற்பவர்கள் .9842256631 9629226631

எண்களில் தொடர்பு கொள்ளவும்

ஜோதிடத்தில் பஞ்சஅங்ககளே பிரதானம் அதனுடைய கணிதங்கள் கணக்கில்அடங்காது ஆணால் ராசிகளில் பஞ்ச பூதத்தில் ஆகாயத்திற்கு இடம் கொடுக்கவில்லை.

முக நூல் நண்பர்களே!,
பல்லடம் கந்தனடிமை வீ.கே.மந்தராச்சலம் 98422 56631 

ஜோதிடத்தில் பஞ்சஅங்ககளே பிரதானம் அதனுடைய கணிதங்கள் கணக்கில்அடங்காது ஆணால் ராசிகளில் பஞ்ச பூதத்தில் ஆகாயத்திற்கு இடம் கொடுக்கவில்லை. 

மேச சிம்ம தனுசு ராசிகள் மூன்றும் தர்மத்தை தர்மமாகவே இயங்கும் நெருப்பு ராசிகள்.
ரிசப கன்னி மகர. ராசிகள் கர்மத்தை கர்மமாகவே இயங்கும் நிலராசிகள்.
இவை மிதுன. துலாம் கும்பராசிகள் மூன்றும் காமத்தை தர்மமாக இயங்கும் காற்று ராசிகள்.
கடகம் விருட்சகம் மீனம் ராசிகள் மூன்றும் மோட்சத்தை தர்மமாக இயங்கும் நீர் ராசிகள். ராசிகளில் ஆகாயம் இடம் பெறவில்லை. 

உதாரணமாக..நிலராசிகளில் ரிசபம் கால்நடைகள் மேயும் பூமி. மழை காலத்தில் விவசாயமும் செய்வார்கள்,.அடுத்த கன்னிராசி எப்போதும் மனிதர்களுக்கு தேவையான உணவுப்பொருள் விளைவிக்கும் ராசியாகும்,அதேபோல. மகரம் நிலராசியிலே வனமும் வனம்சார்ந்த நிலமும் ஆகும்.இதில் மகரம் மட்டுமே சூட்சுமத்தில் நீர் தன்மையும் இந்த ராசி சொல்லப்பட்டுள்ளது நட்சத்திரங்களில் பஞ்சபூதங்கள் சொல்லபடுகிறது. 
நட்சத்திரகணிதங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது. இதில் பொருத்தங்களில் பஞ்சபூத பொருத்தம் நட்சத்திரங்களில் அஸ்வினி முதல் ஐந்து நட்சத்திரங்கள் நிலம் தத்துவமாகும் திருவாதிரை முதல் ஆறு நட்சத்திரங்கள் நீர் தத்துவமாகும் , உத்திரம் முதல் ஆறு நட்சத்திரங்கள் நெருப்பு தத்துவமாகும்.
கேட்டை முதல் ஐந்தும் காற்று தத்துவமாகும் அவிட்டம் முதல் கடைசி ஐந்தும் ஆகாயதத்துவம் இவைகள் பஞ்சபட்சி பார்த்து பெயர் நாமங்களை வைத்து பலன்கள் கூறுவதற்காக கொடுக்கபட்டுள்ளது, இதில் நீர் தன்மைஉள்ள ஜாதகத்தோடு நெருப்பு தன்மையுள்ள ஜாதகம் பொருத்தகூடாது என்பது சரி என்றால் இல்லை. காரணம் ஆண் பென் இருவரில் ஒருவர் நிலதத்துவ பெயரும். மற்றொருவர் நீர் தத்துவ பெயரும் இருப்பின் நட்சத்திர குற்றமில்லை. அதுவே நீர் தத்துவத்தில் ஆண் பென் இருவரில்
ஒருவர் பெயர் இருந்து மற்றொருவர் பெயர் நெருப்பு தத்துவத்தில் இருப்பின் குற்றமாகும். இதற்கு மேல் திதி ஆய்வு முக்கியமாகும். ஆண் பென் ஜாதகங்களில். பிரதமை.சதுர்த்தி த்வாதசி.திரியோதசி திதிகளில் பிறந்து அதில் சுக்கிரன் மேச சிம்ம தனுசில் இருப்பது தவறு இதேபோல. இருவர் ஜாதகத்திலும் சஷ்டி.நவமி தசமி திதிகளில் பிறந்து அந்த ஜாதகத்தில் செவ்வாய் கடகம் விருட்சகம் மீனத்தில் இருப்பது தவறுஆகும். இதற்குமேல் நீர் தத்துவத்தில் பிறந்த நட்சத்திரகாரர்களுக்கு
துருவநாமயோகம் வ்யாதிபாதம் வஜ்ரம் ஹர்சனம் வியாகாதம் சித்திநாமயோகங்களில் பிறந்திருக்க கூடாது. பஞ்சபூத பொருத்தம் இன்னும் வளரும்.

இதற்கு மேல் சூட்சுமங்கள் எழுதவும் நம் நண்பர்களுக்கு பயன்யளிக்கும் வண்ணம் எழுதவும் நன்றி. தவத்திரு மகரிஷி அவர்கள் கணிதம் வளரும்.

கோலட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். நீங்களும் சோதித்து பாருங்களேன்.

வாழ்கவளமுடன்!!
பல்லடம் கந்தனடிமை வீ.கே.மந்தராச்சலம் 9842256631 

ஜாதகத்தில் தவத்திரு மகரிஷி அவர்களின் கோலட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
நீங்களும் சோதித்து பாருங்களேன். ஒரு ஜாதகர் ஞாயிற்றுக்கிழமையில்
உத்திரம் உத்திராடம் கார்த்திகை நட்சத்திரம் ஒன்றில் திருதியை சஷ்டி நவமி தசமி
திரியோதசி திதிகளில் ஒன்றில் அதே ஜாதகர் சூலநாமயோகம், வரீயான் வைதிருதிநாமயோகங்கள் ஒன்றில் ஜனித்த. ஜாதகர் இந்த ஜனனத்தில் எந்த ஒரு சிறப்பையும் பெறமுடியாது.. 

முன் ஜென்ம கர்ம விணை காரணமாக.உடல் நிலை பாதிப்பு ..சுகமின்மை வாழ்க்கையே விரக்தி, எந்த. நன்மையையும் அடையமுடியாத நிலை,. இந்த நிலையில் பிறந்தவர்கள் இந்த ஜனனம் முழுவதும் அழுது அழுதேதான் அனுபவிக்க வேண்டும் இதில் கிம்ஷ்துக்கினம் கரணத்தில் பிறப்பு என்றால் அவர் புழுவாகத்தான் துடிப்பார் இந்த தொடர்பு பெற்றவர் ஜாதகத்தில் கோள்களின் நிலை ஆட்சி உட்சம் நட்பு நிலை பாசகாதிகர்கள் நிலைகளில் சிறப்புக்களோ வர்க்க கணித நிலையோ சட் வர்க்க நிலையோ எத்தனை வகை கணிதங்கள் போட்டாலும் பலன்கள் மாறுவதே இல்லை. 

இதிலும் அதே ஜாதகம் சிம்மலக்னம் எனில் ஜோதிடத்தில் எவ்வளவு வகை கணிதங்கள் உண்டோ அதில் நீங்கள் எதில் பார்த்தாலும். பலன்கள் மாறவே மாறாது. 

இதில் எதிரிடை கூட பலன்களை மாற்றுவது இல்லை..நன்றி மேலும் சூட்சூமங்கள் இதற்கு எழுத நண்பர்களை வேண்டுகிறேன் மேலும் எனது குரு நாதரின் சூட்சுமங்கள். தொடரும் நன்றி.

மனிதர்கள் வாழ்க்கையில் மிக மிக முக்கியம் ஜிவணம் எனும் தொழிலே அதி முக்கியம் தொழிலைப்பார்ப்பதற்கு லக்னத்திற்கு பத்தாம் இடம்.

முக. நூல் நண்பர்களே பல்லடம் கந்தனடிமை வீ.கே.மந்தராச்சலம் 98422 56631 

மனிதர்கள் வாழ்க்கையில் மிக மிக முக்கியம் ஜிவணம் எனும் தொழிலே அதி முக்கியம் தொழிலைப்பார்ப்பதற்கு லக்னத்திற்கு பத்தாம் இடம். 
பத்துக்குரியவர் அவரின் தொடர்புகள். ராசிக்கு பத்தாமிடம் அவரின் தொடர்புகள். லக்கினாதிபதிக்கு பத்தாமிடம் அவர் . தொடர்புகள். திதி நாமயோகம் கரணம் நட்சத்திரம் நிலை தொடர்புகள். பார்ப்பது ஸ்துலம்,. அந்த ஜாதகத்தில் அதிக பாகை கலை பெற்ற கோளான ஆத்மகாரகன் தசாஅம்சத்தில் அமர்ந்த இடமே காரகம்சம்.
இந்த நிலையில் ஆய்வு செய்வது சூட்சுமம். இதே ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்துக்குடையவருக்கு எதிரிடையில் லக்னமோ சூரியன் சந்திரன் லக்னதிபதி அமர்ந்தலோ.. லக்னதிபதிக்கு எதிரிடையில் பத்துக்குரியவர் அமர்ந்தலோ அந்த ஜாதகருக்கு இந்த ஜனனத்தில் எத்தனை சிறப்பு பெற்ற திசா புத்தி அந்தரங்களிலும்
நடந்தாலும் .லக்னத்திற்கு பத்துக்குடைய தொடர்பு பெற்ற தொழில் இவரை அறவனைக்காது . இதே போலத்தான் ராசிக்கு பத்தாம் இட தொழிலும்...லக்னதிபதிக்கு பத்துக்குடையவருக்கு எதிரிடையில் லக்னமோ சூரியன் சந்திரன் அமர்ந்து விட்டால் அந்த ஜாதகரே அவர் தொழிலை கெடுத்துக்கொள்வார் முன்னிற்கு புரணாக செயல்படும். அவர் ஒன்று நினைத்து செய்தால் அது ஒன்றில் முடியும்,. ஆனால் ஆத்மகாரகனுக்கு எதிரிடையில் தசாம்சத்தில் அவருக்கு வீடு கொடுத்த கிரகம் அமைவதும் லக்னம் லக்னதிபதி ஜென்ம நட்சத்திரம் அமைந்து விட்டால் அவர்கள் அந்த திசா புத்தி காலங்களில் மிக உயரிய நிலைக்கு சென்று
தீடீரென ஆரம்ப நிலைக்கு வருவதை நாம் கண் கூடாக காணலாம். இந்த ஆய்வு முற்றிலும் அப்படியே நடப்பதை பார்க்கலாம். இக் கணிதத்தை வாசி நிலையில் அமர்ந்து
கண்டெடுத்த. என் குரு நாதர் தவத்திரு மகரிஷி அவர்களுக்கு கோடாண கோடி வணக்கங்கள். நீங்களும் ஆய்வு செய்து பாருங்கள். இதற்கு மேலும் மேலும் சூட்சுமங்கள் எழுதினால் முக நூல் நண்பர்களுக்கு நன்மையே. நன்றி எதிரிடை ஆய்வு வளரும்