Friday, 16 September 2016

திருமண பொருத்தம் பதிவு 7.

திருமண பொருத்தம் பதிவு 7:
ஐந்து பதிவுகளில் பொருத்தம் தொடர்பான சூட்சுமங்களும்.
ஆறாவது பதிவில், தினப் பொருத்தம் பார்ப்பது பற்றி பார்த்தோம்.கணப்பொருத்தம்
பற்றி ஆராய்வோம்.இது பற்றி பஞ்சாங்கம், மற்றும் ஜோதிட நூல்களில், ஆண், பெண்,
இருவரும், ஓரே கணம் எனில் சிறப்பு..பெண் மனுஷ கணம் ஆண் தேவ கணம் என்றாலும் சிறப்பு.பெண் தேவ கணமும் ஆண் மனுஷ கணம். பெண் தேவ கணம், ஆண் ராஷ்சச கணமானால்.சுமார் என்றும். மற்ற நிலைகள்.தவறு என்று கூறியுள்ளார்கள். .அதோடு பெண் நட்சத்திரம் முதல் ஆணின் நட்சத்திரம், 14, க்கு மேல் இருந்தால்,கணதோஷ இல்லை.சேர்க்கலாம்.ஆனால் கணம் என்பது மனம் (குணம்)
சம்மந்தப்பட்ட விசியமாகும். தேவ கணம், மனுஷ கணம், ராஷ்சச கணம், என்று நம்
முன்னோர்கள் பிரித்தார்கள். ஆனால் நாம் ஆய்வுசெய்தால் ஒவ்வொரு மனிதரிடமும்,
மூன்று குணங்கள் மட்டும் இல்லை, பல குணங்களை காண்கிறோம்.அதைத்தான்,
என் குரு நாதர் தவத்திரு மகரிஷி அவர்கள்,வர்க்கத்தில் ஒரு ராசியை, 12 கூறாக்கும்.
துவாதம்சத்தில் சந்திரன் எந்த ராசியில் உள்ளாரோ, அந்த குணம்,அவர்களிடம் இருக்கு
என்பார்கள்.அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே. 
உலகத்திலுள்ள அனைவரும் பன்னிரண்டு ராசிகளில் எதோ ஒன்றில் தான் ஜனனம்.அதில் பன்னிரண்டு ராசிகளில் ஐந்து ராசிகள் மட்டுமே, மணிதகுணம்.
மற்றவை மிருகத்தின் குணம்.
ஆம் (மேசம்) ஆட்டின் குணம்.நுனிப்புல் மேய்ந்து அடுத்தவர்களுக்காக வாழ்வது

(ரிசபம்) பசு மாட்டின்குணம் அடுத்தவர்களுக்கு பொதிசுமப்பது, அசைப்போடுவது மணிதர்களுக்காக வாழ்வது. 

(கடகம்) நண்டின் குணம், உடன் எத்தனை பேர்கள் இருந்தாலும் அனைவரையும் கீழே இழுத்து விட்டு விட்டு தான் முதழிடம் செல்லும் குணம்.

(சிம்மம்) சிங்கத்தின் - குணம்.எத்தனை பேர்கள் இருந்தாலும்,அனைவரையும் எதிர்க்கும் குணம், இது ராஜா. 

(விருட்சகம்) வினோத குணம், தேளின் குணம். உலக உயிரினங்களிலேயே விசித்திரமான ஒரே உயிரினம், தேள் ஆகும்.நமக்கெல்லாம், தேள் நோண்டினால், தீன்டும் அது மட்டுமே நமக்குதெரியும் ஆனால் உலகிலேயே நம்முடன், வாழும் உயிரினங்கள் எல்லாவற்றிலும் , தன்னுடைய உடலை, தன் குழந்தைகளுக்கு உணவாக தரும், உயிரினம் தேள் மட்டுமே, ஆம் தேள்குட்டிகள், அதன் தாயின் உடலை சாப்பிட்டு தான் வளரும். தேள் மட்டும் ஒரு முறை மட்டுமே இனப் பெருக்கம் செய்யும்.

(மகரம்) யாரலும் புரிந்து கொள்ள முடியாதது.நீரிலும், நிலத்திலும், வாழும் உயிரின- மாகும். பன்னிரண்டு ராசியில் நீரும், நிலமும், வனமும், கலந்த ஒரே ராசி மகரமாகும். அந்த உயிரினம் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள் ளும், புரிந்து கொள்ள முடியாத உயிரினமாகும். 

(மீனம்) மீன்கள் குணம்.நீரில் மட்டுமே வாழும் உயிரினம். துனையின்றி இருக்காது. இதை தான் பட்டினத்தார் சுவாமிகள், ஒவ்வொருவரையும். அதோ மாடு செல்கிறது. இதோ ஆடு வருகிறது, நண்டு இழுக்கிறது, சிங்கம் முறைக்கிறது, தேள் கொட்டுகிறது, முதளை கவணிக்கிறது, கழுவர மீனிலும் நழுவர மீன் இவன், இப்படி மணிதர்களைப் பார்த்து பட்டினத்தார் சுவாமிகள் கூறுவார்களோ.

மேலும் கணம் பார்க்க மிக முக்கியம், நட்சத்திர ஆய்வு இருவரின் நட்சத்திரஅதிபதி
கள், நட்பானால் சிறப்பாகும். மிக மிக முக்கியம் நட்சத்திர நிலையில், காரக, பாசக,
போதக,வேதகன்,நிலையுடன் எதிரிடை கணிதகங்களை இனைப்பது.மற்றும்.
கணம் (குணம்) பார்க்கவே, (தர்மம்) நியாயம், தர்மம், புண்ணியம், நிலைகளுடன்.
(கர்மம்) ஆணவம், கன்மம், மாயை, இக் குணத்துடன். (காமம்) காமம், வெகுளி,
மயக்கம், மண நிலையில். (மோட்சம்) அறம், பொருள், இன்பம், தன்மைகளை-
பார்த்து கணத்தை முடிவு செய்ய வேண்டும்.படிக்கும் உங்களுக்காக கண பொருத்த
இதனை நிறைவு செய்து. அடுத்த பதிவில் மகேந்திர பொருத்தத்தில், இனைவோம்.
இந்த கண பொருத்தத்திற்க்கு சந்திரன் நிலை அவசியம். இந்த பொருத்தத்திற்கு
மேலும் சூட்சுமங்கள் எழுதவும். நன்றி

திருமண பொருத்தம் பதிவு 6

திருமண பொருத்தம் பதிவு 6
இது வரை பொருத்தம் பார்க்க மிக முக்கியத்துவம் வாய்ந்த சில சூட்சுமங்களை ஐந்து
பதிவுகளில் பார்த்தோம்.. இது வரை பார்த்த சூட்சுமங் களுடன்.பொருத்தம் பார்ப்போம்.

இந்த பதிவில், தினப் பொருத்தம்.நிலைகளை ஆய்வு செய்வோம். பெண்
நட்சத்திரம் முதல் எண்ண ஆண் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11,13, 15, 18, 20, 24, 26. ஆம்
நட்சத்திரங்களாக வந்தாலும். ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம், ஆகிய நட்சத்திரங்கள் ஆண் பெண் இருவருக்கும் ஏகமாக
வந்தால் சிறப்பு என்றும் அஸ்வினி, கார்த்திகை , மிருகசீரீடம், புனர்பூசம், உத்திரம்,
சித்திரை, அனுஷம், உத்திராடம், ஆகியவை ஆண் பெண் இருவருக்கும் இருப்பது
மத்திமம்.என்று பஞ்சாங்கங்களில் சொல்லப்படுகிறது. 

அதை பார்த்து விட்டு மேலும். தினப்பொருத்தம் பார்க்க :-

பெண் லக்னம் ஆண் லக்னம் நிலை என்ன. பெண்ணின் லக்னாதிபதி ஆண்ஜாதகத்தில்
நிலை என்ன, சுப நிலைகளை பெற்று இருப்பது நலம்..ஆனா அசுப நிலைகலோ, வக்கிரம்,
அஸ்தமனம், மாரக, பாதக, பாபிகள் நிலை தொடர்புகள் தவறாகும். இதேபோல் ஆண்
லக்னாதிபதி பெண் ஜனன ஜாதகத்தில் சுப நிலைகளை பெற்றுரிக்க வேண்டும்.நலம்.
அசுப நிலைகலோ, வக்கிரம், அஸ்தமனம், மாரக, பாதக, பாபிகள் தொடர்புகள் தவறு.
பெண்ணின் ஜாதகத்தில்- சுக்கிரன் நின்ற வீடே ஆண் லக்னமாக வருவது சிறப்பு.
இதேபோல், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற வீடே பெண் லக்னமாக வருவதும் சிறப்பு.
பெண்ணின் லக்னாதிபதி, ஆண் ஜாதகத்தில் சுப நிலை பெற்று இருந்தால் சிறப்பு..
அசுப நிலைகள் பாபிகள் தொடர்பு தவறாகும்.இதே போல ஆண் லக்னாதிபதி
பெண் ஜாதகத்தில், சுபநிலை பெறுவது சிறப்பாகும். அசுப நிலைகள், பாபிகள் -
தொடர்பு தவறாகும். பெண்ணின் ஆருட லக்னம் ஆண் லக்னம் மாக வருவது
சிறப்பு. .ஆணின் ஆருடலக்ன பெண் லக்னமாக வருவதும் சிறப்பாகும்.இதற்கெல்லாம்
மேலாக :-என் குரு நாதர் தவத்திரு மகரிஷி அவர்கள் நமக்களித்த எதிரிடையில்,
ஆண் பெண் இருவர், லக்னம் லக்னாதிபதிகள், ஒன்றுக்கு ஒன்று எதிரிடையில் கூடவே
கூடாது. மேலும் தினம் பொருத்தம் நிலை தொடர்பு சூட்சுமங்கள் முகநூல்
நண்பர்கள் பயண்படும்படி எழுததவும். நன்றி

திருமண பொருத்தம் பதிவு 5

திருமண பொருத்தம் பதிவு 5
இது வரை பார்த்த சூட்சுமங்களுடன் மேலும் ஆண் பெண் இருவரின் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் கௌமார மரண அவஸ்தையில் இருக்க கூடாது. 
இருவரின்ஜாதகத்தில் சுக்கிரன். சூரியனிலிருந்து பத்து பாகைகளில் இருக்க கூடாது. 
ஆண் பெண் இருவரும் கன்னிராசியில் 27 - வது பாகையில் - சுக்கிரன் இருக்க கூடாது.
இரண்டு பேர் ஜாதகத்தில் சுக்கிரன் சிம்மம்.துலாம்.ரிசப மீனராசியில் 27.பாகையில்
இருப்பது சிறப்பு இந்து லக்னத்தில் இருவரின் ஜாதக நிலையில் சுக்கிரன் ஏழாம் -
அதிபதிகள் நிலை சிறப்பு. இருவர் ஜாதகத்தில் சுக்கிரன். ஏழுக்குடையவர்கள். மிருத்து
அந்தகாம்சம் பாகைகளில் இருக்க கூடாது. 
இருவரின் ஜாதகத்திலும் சுக்கிரன் ஏழுக்குடையவர்கள் பலன் தரும் கோள் லக்ன சுபர் நிலை சிறப்பு. 
அதேபோல் மாரகாதிபதி பாதகாதி பதி நிலைகள் தவறு இருவரின் ஜனன. ஜாதகத்தில் சுக்கிரன் ஏழாம் அதிபதிகள் அங்கிசம் அங்கிசாதிபன் சுப நிலையில் இருப்பது சிறப்பு. 
அதேபோல்
அசுப நிலை தவறாகும்.. நாவம்ச வர்க்கத்தில் சுக்கிரன். ஏழுக்குடையவர் சுப நிலை
வேண்டும்.ஆண் பெண் இருவருக்கும் கண்டிப்பாக அவர்களின் 34 வயதிற்கு
மேல் 52. வயதிற்குள் (அவரவர் வயதில்) சுக்கிரதசை தொடங்கவோ.
நடக்கவோ கூடாது.
இருவரின் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் ஏழாம் அதிபதி. கீழ்நோக்கு
நட்சத்திரத்தில் கூடாது. இதற்கு எல்லாம் மேலாக என் குரு நாதர் தவத்திரு
மகரிஷி அவர்களின் காட்டிய சாதக தாரை நிலையில் சுக்கிரன் ஏழாம் அதிபதி
லக்னதிபதி ஒன்றுக்கு ஒன்று அமைவது சிறப்பாகும்.ஆனா சுக்கிரனுக்கு எதிரிடையில்
ஏழாம்அதிபதி லக்னதிபதி லக்னம்.அமைவதுவும். லக்னாதிபதிக்கு எதிரிடையில்
சுக்கிரன். ஏழுக்குடையவர்கள். ஏழுக்குடையவருக் எதிரிடை -யில் சுக்கிரன் லக்னதிபதிகள் அமைந்து விட்டால் எந்த நிலையிலும் சரி செய்யவே
முடியாது.. .இரண்டு ஆத்மா (ஆண் பெண்) எங்கேயோ பிறந்து எங்கெங்கோ வளர்ந்த
இருவரையும் ஒன்றினைக் -கும் பாலமே ஜோதிடம் (பொருத்தம்)அதை சரியாக
இனைக்க வேண்டும். இன்னும் உள்ள சூட்சுமங்கள் முக நூல் நண்பர்கள் பயன்
படும்படி எழுதவும் நன்றி.

திருமண பொருத்தம் பதிவு 4

திருமண பொருத்தம் பதிவு 4
திருமண பொருத்தங்கள் பற்றி மூன்று பதிவுகளின் தொடர்ச்சி. இது வரை பலவித
சூட்சுமங்கள் பார்த்தோம். அதன் தொடர்ச்சிகள். இதோ.
1.  ஆண் பெண் இருவருமே வளர்பிறை ஞாயிறு ஜனனம் கூடாது. கிழமை (நாள்) தன்மையில் தவறாகும்.
2. ஆண் பெண் இருவருமே பிரமை.சதுர்த்தி.த்வாதசி. திரியோதசி.இத் திதிகளில்
இருவர் ஜனனம் இருப்பின். சேர்க்கவே கூடாது. 
3. இதே மாதிரி பெண் நட்சத்திரம் வதை பார்ப்பது போலவே ஆண் முதல் பெண்னிற்கும் பார்க்க வேண்டும்.
4. பெண சாரம் முதல் 22 நட்சத்திரமு ஆண் நட்சத்திரம் முதல் 22 நட்சத்திரம் இருப்பின்.சேர்க்க -வே கூடாது. 
5. சேமதாரை தானே என்று நூறூ சதவீதம் சேர்க்கவே கூடாது. 
6. அடுத்து மிக முக்கியமாக பெண்னின் ஜனன நாம யோகத்திற்கு யோக நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் என்றால் மிகவும் சிறப்பு.அதுவே அவயோக நட்சத்திரம் எனில்
கூடவே கூடாது. 
7. இதேமாதிரி ஆண் ஜனன நாம யோகத்திற் வரும். யோக நட்சத்திரம்
பெண் நட்சத்திரம் எனில் மிக மிக சிறப்பு. அதுவே அவயோக நட்சத்திரம் பெண்
என்றால் சேர்க்க கூடாது. 

இந்த ஆய்வு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

பலவழிகளில் ஆண் பெண் இருவரும் அமாவாசை. கிரகணம் நிலை தவறாகும்.இரண்டு பேருமே சௌபாக்கிய நாம யோகம். வியாகாதம் வைதீருதி நாம யோகங்களில் பிறந்திருக்க கூடாது. ஆண் பெண் இருவரும் .செவ்வாய்கிழமை மேச விருட்சக ராசிகள்
லக்னமாகவோ.ராசியாகவோ ஜனனம் கூடவே கூடாது. அதற்கு காரணம் ராசிகள்
6.8.ஆக வருவது மட்டும் காரணம் அல்ல. மேசம் நெருப்பு தன்மையும். விருட்சகராசி நீர் தன்மையும் பெற்று ஆறூ எட்டு நிலை தவறாகும்.பெண் ஜனன லக்னத்திற்கு பாதகஸ்தானம் ஆண் லக்னமாகவோ.அல்லது ஆண் ஜனன லக்னத்திற்கு பாதகஸ்தானமாக வரும் ராசியே பெண் லக்னம் எனில் சேர்க்கை கூடாது.இவற்றுக்கு மேலாக என் குரு நாதர் தவத்திரு மகரிஷி அவர்கள்
நமக்களித்த எதிரிடை மிக அவசியம் பார்க்க வேண்டும். 
மேலும் சூட்சுமங்கள் தொடரும் ..நண்பர்கள் பயன்படும் படி இதற்கு சூட்சுமங்கள் எழுதவும் நன்றி.

திருமண பொருத்தம் பதிவு 3

திருமண பொருத்தம் பதிவு 3:
திருமண பொருத்தம் பார்க்க வயதை கணக்கிட்டவுன்.திசா தொடர்புகள் ஆராய்ந்த பின். பொருத்தம் தொடர்புள்ள சூட்சுமங்களை முதலில் கவனிக்கவேண்டும். 
முக்கியமாக :
ஆண் பெண் இருவரின் ஜாதகத்தில் பத்தாம் பவத்தை ஆய்வு செய்ய வேண்டும்.ஏன் லக்னத்திற்கு பத்தாமிடம் கர்மஸ்தானம். அடுத்தவர் - களுக்கு நாம் செய்யும் அனிவிடை பணிவிடையா - கும்.எனவே இந்த ஆண்மகன் செய்யும் செயல்களை இந்த பெண் ஏற்றுக்கொள்கிறார. பெண் செய்யும் பணிவிடை - களை ஆண் ஏற்றுக்கொள்கி - றார்களா என்பதை பத்தாம் இடத்தை வைத்துதான் பார்க்க வேண்டும்.

ஒருவரின் ஆண்) பத்துக்குடையவர் பெண் ஜாதகத்தில் கெட்டு விட்டாலோ, பெண்னின் பத்துக்குடையவர் ஆண்  ஜாதகத்தில் கெட்டு விட்டால் சேர்க்க கூடாது. கருத்து வேறு பாடுகள் வருவதற்க்கு காரணம் இந்த நிலை தான். எனவே இந்தகணிதம் பொருத்தம் பார்க்க மிக மிக முக்கியம். 

அடுத்தபடி,  சுக்கிரன் நிலைகளை நன்கு ஆய்வு செய்ய வேண்டும். உதாரணமாக :இருவருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் மகரம்.கும்பம் ராசிகளில் இருக்க கூடாது.இந்த நிலை திசா புத்தி அவதார கோட்சார காலங்களில் பிரிவுகளை தரும்.இந்த நிலை ஆய்வுகள் பல நிலைகளில் பார்த்த பின்பு தவத்திரு மகரிஷி அவர்கள் நமக்களித்த எதிரிடை கணக்கே அப்படியே தன் வேலையை முழுமையாக செய்யும்.
உதாரணமாக :
பெண் ஜென்ம நட்சத்திரத்திற் எதிரிடையில் ஆண் ஜென்ம நட்சத்திரம் அமைந்தாலும்.
ஆண் ஜென்ம நட்சத்திரத்திற் எதிரிடையில் பெண் ஜென்ம நட்சத்திரம் அமைந்தாலும்
இவர்களை சேர்க்கவே கூடாது.எதிரிடை கணிதம் திருமண பொருத்தத்தில்
கோள்களின் விளையாட்டே இந்த எதிரிடையில் ஏழாமிடம் சுக்கிரன் லக்கினதிபதி
நிலைகள் ஒன்றுக்கொன்று எதிரிடையில் அமைந்த ஜாதகர்கள் தான்.நீதிமன்றம்
செல்கிறார்கள்.விவாகரத்து கேட்பதற்க்கு.இன்னும் சூட்சுமங்கள் தொடரும்.
அதற்கு பின் பொருத்தம் பற்றிய சூட்சுமங்கள்.நன்றி பொருத்தங்கள் பற்றிய
சூட்சுமங்கள் நண்பர்கள் பயன்படும் படி எழுதவும்.

திருமண பொருத்தம் பதிவு 2


திருமண பொருத்தம் பதிவு 2
மணமக்கள் ஜாதகங்களை வாங்கியதும்.முதலில் வயதை கணக்கிடவேண்டும்.
வயது வித்தியாசம் 12 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். குரு பெண் ஜாதகத்தில் இருக்கும் இடத்திலிருந்து குரு ஆண் ஜாதகத்தில் பன்னிரண்டு ராசி களில் இருக்கவேண்டும்.
குரு ஆண் பெண் இருவருக்கும். பன்னிரண்டு வருடங்களுக்கு பின் மாறி மாறி போக சுகத்தை தருகிறார் குரு. பால பருவம்.கௌமார பருவம்.யௌவ்ன பருவம். விருத்தி பருவம்.மரணம் பருவம்.
இப்படி கர்மாவுக்கு தக்கபடி குரு போகத்தை தருகிறார்.எனவே வயது
வித்தியாசமும் முக்கியம். 

அடுத்து இருவர் ஜாதகத்தில் திசைகளை கணக்கிடனும்.
ஒருவர் திசை மற்றவருக்கு தவறான திசையாக கூடாது. 
உதாரணமாக : ஆண் ஜாதகத்தில் மனைவிக்கு தவறான திசையாக இருந்து அதே காலத்தில் பெண்னின் ஜாதகத்திலும் தவறான திசை கள். வருமேயானால் தவறு. சேர்க்க கூடாது.கூட்டுதிசை என்றால் இருவர் ஜாதகத்தில் திசாநாதன் சுப நிலை சிறப்பு. திசாநாதன் ஒருவர் ஜாதகத்தில் சுப தன்மையில் மற்றவர் ஜாதகத்தில் அசுப நிலை எனில் சிறப்பில்லை. இருவர் ஜாதகத்திலும் அசுப நிலை என்றால் சேர்க்கவே - கூடாது.அடுத்து திசா சந்தி பார்க்க வேண்டும்.அதாவது ஒருவர் ஜாதகத்தில் ஒரு திசை தொடங்கி மற்றவர்க்கு ஒன்னேகால் வருடத்தில் (பதினைந்து மாதங்களில்) அதற்கு அடுத்த திசை தொடங்க கூடாது.உதாரணம் :ஆண் பெண் இருவரில் ஒருவருக்கு சூரியதிசை தொடங்கும் காலத்திற்கு முன் ஒன்னேகால் வருத்திற்குள் சுக்கிர திசை தொடங்கியிருக் -ககூடாது.அடுத்த ஒன்னே- -கால் வருடத்தில் சந்திரன் திசை தொடங்க கூடாது. இதுவே திசா சந்தியாகும். திசா சந்தியிருப்பின் சேர்க்கவே கூடாது.இதற்கு மேல்.என் குருநாதர் தவத்திரு மகரிஷி அவர்களின் எதிரிடை நிலைகள் கண்டிப்பாககூடாது. திருமண பொருத்தம் ஆய்வு தொடரும்.

திருமண பொருத்தம் பற்றி......

திருமண பொருத்தம் பற்றி என் குரு நாதர் தவத்திரு மகரிஷி அவர்கள் பல வழிகள்
மூலம் கற்றுனத்தினார்கள். 
அனைத்து துறைகளும் வளர்ந்து கொண்டே உள்ளது. ஆனால் ஜோதிடம் மட்டும் தாழ்ந்து கொண்டு உள்ளது . சிந்தித்து பாருங்கள். நமது வீட்டு குழந்தைகள்.ஆங்கிலம் மீடியத்தில் முதல் வகுப்பு படிக்கும் குழந்தையின் ஒரு
நாள் ஒரு வகுப்பு பாடம் தான் பத்து பொருத்தங்கள்.அதில் பாருங்கள் பஞ்சாங்கம்
எழுதியவர்களே பத்து பொருத்ததில் ஐந்து இருந்தா போதும் செய்யலாம்.அதிலும்
குறையிருப்பின். காந்தர்வம் (ஒருவருக்கு ஒருவர் மனசுகள் இனைவது) கர்ப்ப நிசேதம். அந்த குழந்தை தாயின் கற்பத்தில் இருக்கும் போதே முடிவு செய்வது. இப்படி இருந்தாலும்.சகுனம் வழி தடம் சுத்தமாக இருப்பின் திருமணம் செய்யலாம். குல குரு தெய்வம் நியமனம் இருப்பின் செய்யலாம். ஜாதகமில்லாவிடில் நாம நட்சத்திர பொருத்தம் பார்க்க அப்படி பார்த்தால் இருபதாம் நூற்றாண்டுகளில் நட்சத்திரம்
பார்த்து நாம எழுத்துக்களில் பெயர் வைத்தார்கள்.இன்று?? ரச்சு தட்டினால் செய்ய
கூடாது என்கிறார்கள்.

ஆனால் ரச்சு பார்க்க அரோகணம் அவரோகணம் கூட பார்ப்பது
இல்லை.இதற்கும் பல வழிகள் உள்ளன.இதற்கு மேல் செவ்வாய் தோசம் வேறு.

இந்தியாவிலேயே அதிகம் பேர் படித்த மாநிலம் ஜோதிடத்திலேயும் அறிவாலி -கள் உள்ள மாநிலமான நம் கோவையிலிருந்து முப்பது கிலோ மீட்டருக்குள் இருக்கு கேரளாவில் செவ்வாய் தோசம் செய்வது இல்லை. 

சூரியன் அதிதேவதை சிவன்.
சந்திரன் " " பார்வதி செவ்வாய் " முருகன் புதன் " " விஷ்னு குரு "(ப்ரம்மா)  ட்சினாமூர்த்தி
சுக்கிரன் " " லட்சுமி சனி " அனுமன். பெருமாள். . . ராகு " " "துர்க்கை கேது " " வினாயகர்
இப்படி பல விதங்களில் அதிதேவதைகள் இருந்தாலும் அவர்களில் அழகான அன்பே
திருவுருவான குழந்தை தெய்வத்தை அதி தேவதை முருகனை கொண்டது தான்
மங்களன் எனும் செவ்வாய்.?? நாம நட்சத்திரம் பெயர் முதல் எழுத்து வைக்க.
நாம் பிறக்கும் பொழுது நம்மை காக்க. நமக்கு வரும் இன்னல்களை காப்பற்ற நாம்
வணங்குவதற்காக.நம்மோடு பிறந்த உண்மை சகோதரர்கள் தான்.மிருகம்.மரம்.பச்ஷி.
அதே போல கணம்.அவர்கள் குணங்கள் தான்.அந்த குணம் அவ்வப்பொழுது இருக்கும்.
இரு மணங்களை ஒன்றினைக்கும் திருமணம். ஒருவருடைய ஆத்மா இன்னொருவர் ஆத்மாவில் இனைப்பது தான். . .அதற்கு. அடுத்த பதிவிலிருந்து மண பொருத்தங்கள் ஆரம்பம். நண்பர்களே திருமணம் பொருத்தத்தில் உள்ள சூட்சுமங்கள் எழுதவும் நன்றி.