Friday, 16 September 2016

திருமண பொருத்தம் பதிவு 2


திருமண பொருத்தம் பதிவு 2
மணமக்கள் ஜாதகங்களை வாங்கியதும்.முதலில் வயதை கணக்கிடவேண்டும்.
வயது வித்தியாசம் 12 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். குரு பெண் ஜாதகத்தில் இருக்கும் இடத்திலிருந்து குரு ஆண் ஜாதகத்தில் பன்னிரண்டு ராசி களில் இருக்கவேண்டும்.
குரு ஆண் பெண் இருவருக்கும். பன்னிரண்டு வருடங்களுக்கு பின் மாறி மாறி போக சுகத்தை தருகிறார் குரு. பால பருவம்.கௌமார பருவம்.யௌவ்ன பருவம். விருத்தி பருவம்.மரணம் பருவம்.
இப்படி கர்மாவுக்கு தக்கபடி குரு போகத்தை தருகிறார்.எனவே வயது
வித்தியாசமும் முக்கியம். 

அடுத்து இருவர் ஜாதகத்தில் திசைகளை கணக்கிடனும்.
ஒருவர் திசை மற்றவருக்கு தவறான திசையாக கூடாது. 
உதாரணமாக : ஆண் ஜாதகத்தில் மனைவிக்கு தவறான திசையாக இருந்து அதே காலத்தில் பெண்னின் ஜாதகத்திலும் தவறான திசை கள். வருமேயானால் தவறு. சேர்க்க கூடாது.கூட்டுதிசை என்றால் இருவர் ஜாதகத்தில் திசாநாதன் சுப நிலை சிறப்பு. திசாநாதன் ஒருவர் ஜாதகத்தில் சுப தன்மையில் மற்றவர் ஜாதகத்தில் அசுப நிலை எனில் சிறப்பில்லை. இருவர் ஜாதகத்திலும் அசுப நிலை என்றால் சேர்க்கவே - கூடாது.அடுத்து திசா சந்தி பார்க்க வேண்டும்.அதாவது ஒருவர் ஜாதகத்தில் ஒரு திசை தொடங்கி மற்றவர்க்கு ஒன்னேகால் வருடத்தில் (பதினைந்து மாதங்களில்) அதற்கு அடுத்த திசை தொடங்க கூடாது.உதாரணம் :ஆண் பெண் இருவரில் ஒருவருக்கு சூரியதிசை தொடங்கும் காலத்திற்கு முன் ஒன்னேகால் வருத்திற்குள் சுக்கிர திசை தொடங்கியிருக் -ககூடாது.அடுத்த ஒன்னே- -கால் வருடத்தில் சந்திரன் திசை தொடங்க கூடாது. இதுவே திசா சந்தியாகும். திசா சந்தியிருப்பின் சேர்க்கவே கூடாது.இதற்கு மேல்.என் குருநாதர் தவத்திரு மகரிஷி அவர்களின் எதிரிடை நிலைகள் கண்டிப்பாககூடாது. திருமண பொருத்தம் ஆய்வு தொடரும்.

No comments:

Post a Comment